நாசரேத்: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை சார்பில் கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளத்தை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்தில் உள்ள 10 மடைகளின் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது.. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு இக்குளத்தின் 7ம் நம்பர் மடை கால்வாயை தூர்வார விவசாயிகள், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் 7ம் நம்பர் மடை கால்வாயை தூர்வாரினர்.