மஞ்சூர்: மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் தாய்சோலை, கேரிங்டன், கோரகுந்தா, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கேரிங்டன் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேறோடு சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.