சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நல்ல மழை பெய்து வந்தது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. சென்னையில் முக்கிய பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எம்ஆர்.சி. நகர், அடையாறு, மத்திய கைலாஷ், பெருங்குடி, வேளச்சேரி, பெரம்பூர், எழும்பூர், சென்ட்ரல், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. இதே போல தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது.