சென்னை: திருவல்லிக்கேணி இஸ்மாயில் மைதானம் பகுதியை ேசர்ந்தவர் சாரதி (30). இவரது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்ததால், சாரதியை தாய் மாமன் வளர்த்துள்ளார். இந்நிலையில், சாரதியிடம் அவரது தாய் மாமன் திடீரென பேசாமல் இருந்துள்ளார். இதுகுறித்து சாரதி பலமுறை கேட்டும் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாரதி நேற்று சிங்காரச்சேரி கூட்ரோடு பகுதியில், தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.