தாய்மாமன் பேசாததால் விரக்தி பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு

சென்னை: திருவல்லிக்கேணி இஸ்மாயில் மைதானம் பகுதியை ேசர்ந்தவர் சாரதி (30). இவரது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்ததால், சாரதியை தாய் மாமன் வளர்த்துள்ளார். இந்நிலையில், சாரதியிடம் அவரது தாய் மாமன் திடீரென பேசாமல் இருந்துள்ளார். இதுகுறித்து சாரதி பலமுறை கேட்டும் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த சாரதி நேற்று சிங்காரச்சேரி கூட்ரோடு பகுதியில், தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி ஐஸ் அவுஸ் போலீசார் விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் இருந்த சாரதியை மீட்டு கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் சாரதிக்கு கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட முயன்றனர். அப்போது சாரதி எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி மருத்துவமனையில் இருந்த தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து தப்பி  ஓடிய சாரதியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: