சென்னை: மனைவியை கொள்ள முயன்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் தனது மனைவி மற்றும் மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொள்ள முயன்றதாக கடந்த 2015ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து, இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து அசோகனுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் அசோகன் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.