சென்னை: தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் தலைமையிலான அரசு கிராமப்புற ஏழை ஏளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை அமல்படுத்தியது. விவசாய வேலை இல்லாத காலங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஏரி, குளங்களை மராமத்து செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம். இந்த திட்டத்தை சீரழிக்கும் முயற்சியில் ஊழல்வாதிகள் முயன்று வருகின்றனர்.