டெல்லி: ப.சிதம்பரத்தை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விசாரிக்க அனுமதிகோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைதான ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் உள்ளார்.