சாலை விபத்தில் உயிரிழந்த டிரைவர் குடும்பத்துக்கு 24 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலையில் நடந்து சென்றபோது, கார் மோதி உயிரிழந்த பஸ் டிரைவர் குடும்பத்துக்கு 24.65 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகலிவாக்கத்தை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (42), பஸ் டிரைவர். கடந்த 2015ம் ஆண்டு ஐயப்பன்தாங்கல் பேருந்து பணிமனை அருகே, நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வேகமாக வந்த கார், டிரைவர் பரமேஷ்வரன் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த  அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், கணவரின் இறப்புக்கு உரிய இழப்பீடு கோரி, அவரது மனைவி அமுதா மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு நடந்தது. மனுதாரரின் இறப்புக்கு கார் டிரைவர் காரை அலட்சியமாக ஓட்டியதும், கவனக்குறைவே முக்கிய காரணம். மேலும், அவரது இறப்பு குடும்பத்தினருக்கு பெரும் இழப்பு. எனவே டிரைவரின் இறப்புக்கு இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் ₹24.65 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: