தண்டையார்பேட்டை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் இளையபெருமாள். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் தரணிஷ் (15) என்ற மகன் இருந்தான். இவன் வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 13ம் தேதி சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே பெற்றோர் அவனை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.