சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக்., எம்.ஐ.டி. உள்ளிட்டவை அண்ணா பல்கலைக்கழகமாக செயல்படும். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தனி பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.