சென்னை: கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கோரி சென்னையில், திமுக உள்ளிட்ட மாணவ அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள இன்றைய சூழ்நிலையில், சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமாவின் தற்கொலை விவகாரமானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் கட்சியினர் மற்றும் மாணவ அமைப்புகள், கையில் எடுத்து போராடி வரும் நிலையில் மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் திமுக உள்ளிட்ட மாணவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கோரிக்கை
- மாணவர் அமைப்புகள்
- சென்னை
- கல்வி நிறுவனங்கள் மாணவர் அமைப்புகளில் பாதுகாப்பான சூழலை உருவாக்க கோரிக்கை
- திமுக