தண்டையார்பேட்டை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் வீட்டிற்கும், அவர்கள் பணிபுரியும் காவல் நிலையத்திற்கும் அதிக தூரம் இருப்பதால் ஓய்வு இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் காவலர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் தவித்து வந்தனர். எனவே, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், காவலர்களுக்கு நவீன ஓய்வறை கட்டப்படும், என அறிவித்தார். அதன்பேரில், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்கே நகர், கொருக்குப்பேட்டை புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் ஓய்வு எடுக்கும் வகையில், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ₹5 லட்சம் செலவில் நவீன காவல் ஓய்வு அறை கட்டப்பட்டது.