சென்னை: ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று முதல்வர் எடப்பாடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் அளித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அப்துல் லத்தீப் கூறுகையில், ‘‘குற்றவாளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்றார். இதை தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அப்துல் லத்தீப் சந்தித்து பேசினார். மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.