கடலூர்: கடலூர் முதுநகர் பச்சயாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பிரதாப் (24).கடந்த 2- 9 -2015 அன்று கடலூர் முதுநகர் இருந்து கடலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நஷ்டஈடு கேட்டு பிரதாப்பின் தாய் லட்சுமி, தங்கை பிரியா ஆகியோர் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன்,முகுந்தன் ஆகியோர் ஆஜராகினர்.