சென்னை: 1,125 சிலைகள் மீட்கப்பட்டதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அளித்த அறிக்கை குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட கோரி வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு பரிந்துரை செய்துள்ளது. சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் இந்த வழக்கினை தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், ஆதாரமற்ற தகவலை பொன்.மாணிக்கவேல் தருவதாகவும், வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலைகள் கடத்தப்பட்ட சிலைகள் தானா என்பதற்கு சான்றுகள் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.