ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை பார்வையிட அனுமதி கோரி திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை அறிக்கையை திமுக வேட்பாளர் பார்வையிட அனுமதிப்பது குறித்து டிசம்பர் 18க்குள் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையமும் வருமானவரித்துறையும் விசாரணை நடத்தின. விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. ரகசிய விசாரணை அறிக்கையை பொதுவெளியில் வெளியிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம் செய்தது. வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் ஆணையம் டிசம்பர் 18க்குள் பதில் மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்தது.

Related Stories: