ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் தோல்வியை தழுவினார். ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் கடந்த 7 மாதங்களில் பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கால் இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை. தற்போது அவர் ஹாங்காங் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அவர் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார்.