மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை இடமாற்றம் செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாகப் பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: