சென்னை: சபரிமலை செல்ல தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜைக்காகத் தொடர்ந்து 60 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி நாளை தொடங்கி வரும் ஜனவரி 20ம் தேதி வரை அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.