திருமலை: தெலங்கானா மாநிலத்தில் 100 கோடி மதிப்புள்ள. பழைய 500, 1000 நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம், சத்திப்பல்லி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ஒரு கும்பல் 80 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். இது குறித்து கம்மம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்திப்பல்லியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஏமாற்றி கள்ளநோட்டுக்களை மாற்ற ஒரு மர்ம ஆசாமி முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சத்திப்பல்லியை சேர்ந்த மாதர் என்பதும் இவரது தலைமையிலான கும்பல் இந்த மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அங்குள்ள ஒரு வீட்டை போலீசார் சோதனை செய்தனர்.