புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை மட்டும் கடந்த அக்டோபரில் 0.28 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், கார், டூவீலர் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் இந்த துறையில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பண்டிகை சீசனும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த மாதத்துக்கான கார் விற்பனை நிலவரத்தை சியாம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை, கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில், 0.28 சதவீதம் சரிந்து 2,85,027 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.