வதந்தி பரப்பிய 2 பேருக்கு ‘காப்பு’

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து வதந்தி பரப்பிய இருவர் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கவுதம் புத் நகர் எஸ்பி வைபவ் கிருஷ்ணா கூறுகையில், ஒருவர் போலீசாரின் அவசர உதவி எண்ணை அழைத்து வன்முறையில் ஈடுபட சிலர் திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஆனால் அது உண்மையில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அரசியல் புலம் உள்ள மற்றொரு நபர் இனகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Related Stories: