டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பூகம்பத்தில் 5 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஈரானின் அசெர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரை நேற்று முன்தினம் திடீரென பூகம்பம் தாக்கியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.17 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது. 8கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு பூகம்பம் உருவாகி இருந்தது.