நாகை: எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்ததாக நாகூர் மீனவர்கள் 20 பேரை ஆந்திர மாநில மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். நாகபட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த 20 மீனவர்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடந்த 8 தினங்களுக்கு முன் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெல்லூர் மாவட்டம் காவலி கிராம கடல்பகுதியில் மீன்பிடித்த போது நாகூர் மீனவர்கள் படகுகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவு பெறாத நிலையில் காயமடைந்த மீனவர்கள் காவலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.