சென்னை: வங்கதேசம் - மேற்கு வங்கத்திற்கு இடையே புல்புல் புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசாவின் 14 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புல்புல் புயலால் ஒடிசாவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், இருப்பினும் நவம்பர் 9-ம் தேதி கனமழை பெய்யக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார். நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.