சென்னை: நொறுக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மாஞ்சா தடவிய நூல் அறுத்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலியாகி உள்ள நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை நிகழ்ந்த மரணங்களின் நிலவரம் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் கடந்த 2006ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் கோதண்டராமன் என்பவர் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து 2007ம் ஆண்டு வடசென்னை பகுதியில் இரண்டு வயது சிறுவனும், 2011ம் ஆண்டில் சென்னை எழும்பூரில் ஷெரீனா பானு என்ற 4 வயது சிறுமியும் மாஞ்சா நூல் அறுந்து உயிரிழந்தனர்.