சென்னை: ‘பிரதமர் மோடியுடன் நடிகைகள், இந்தி நடிகர்கள் செல்பி எடுத்த சம்பவத்தில், எங்கள் செல்போனை மட்டும் பறித்தது ஏன்?’ என்று, பிரபல பாடகர் எஸ்பிபி, சந்தேகத்தை கிளப்பி உள்ளார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், ஆமிர்கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடியுடன், தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக விமர்சனம் எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த கலைத் துறையினர் புறக்கணிக்கப்பட்டதாக சில பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.