சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது வயதுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.