வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அதிகஅளவில் மத்தி மீன்கள் கிடைப்பதாலும் அதன்விலை அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேதாரண்யம் தாலுகாபுஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளத்தில் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி படகுகள் மற்றும் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளத்திலிருந்து குறைந்த தூரம் பைபர் படகுகளில் மீனவர்கள் மத்தி மீன்பிடிக்கச் சென்றனர்.