சோபூர்: ஜம்மூ-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். சோபூரில் இந்திய ராணுவம்-போலீஸ் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ ரத்து செய்ததோடு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, கடந்த அக்டோபர் 30ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த நடவடிக்கையால், ஜம்மு காஷ்மீரில் இன்னும் பத்தற்றமான சூழலே நிலவி வருகிறது. பல்வேறு கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் உள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது தொடர் தாக்குதலைகளை நடத்தினர்.