திருவொற்றியூர்: எர்ணாவூர் மேம்பாலம் அருகே பழுதடைந்த சாலையை போக்குவரத்து போலீசார் கான்கிரீட் கலவை போட்டு சீரமைத்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் மேம்பாலம் வழியாக மாநகர பேருந்து, கன்டெய்னர் லாரிகள், கார், பைக் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், எர்ணாவூர் மேம்பாலம் அருகே இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் மேம்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்று விடுவதால் அடிக்கடி இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் உள்ள இந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர்.