சேலம்: கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற நிர்ணயிக்கப்பட்ட 8ம்வகுப்பு கல்வி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன ஓட்டிகளுக்கு எல்எல்ஆர், லைசென்ஸ், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், தகுதிச்சான்று வழங்குதல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இந்த அலுவலகங்களில் புதிய வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் காகித வடிவிலான ஆவணங்களாகவும், லைசென்ஸ் பிளாஸ்டிக் அட்டை வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நவீனப்படுத்தி‘சிப்’’பொருத்தப்பட்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் தற்போது வழங்கப்படுகிறது.