பெங்களூரு: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கொண்ட 11 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வட கர்நாடக மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து இன்னும் மீண்டு வராமல் உள்ள அந்த மக்களுக்கு மறுபடியும் மீண்டும் மழை பெய்து அச்சம் காட்டி வருவதால், பதட்டத்துடன் காணப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பாகல்கோட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. திம்மண்ணா, அக்சிதா தம்பதியின் மகன் இந்த 11 மாத கைக்குழந்தை. நேற்று முன்தினம் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.