புதுடெல்லி: இன்று தொடங்கும் சாத் பூஜை வழிபாட்டுக்காக, யமுனை ஆற்றங்கரை காட்டுகள் சீரமைக்கப்பட்டு அங்கு அனைத்து வசதிகளும் மாநகராட்சிகளால் செய்யப்பட்டு உள்ளது.பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில மக்களின் வழிபாடுகளில் 4 நாள் விரதம் மேற்கொள்ளும் சாத் பூஜை விசேஷமானது. உலகில் பிறக்க வைத்து, ஆளாக்கியதற்கு சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்படும் சாத் பூஜை இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பூஜையை முன்னிட்டு யமுனை ஆற்றில் அமைந்துள்ள காட்டுகளும் அதன் சுற்றுப் பகுதிகளும் சீரமைக்கபட்டு வருகிறது. நடமாடும் மருத்துவமனை, தற்காலிக கழிப்பறை வசதி, உடை மாற்றும் அறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை டெல்லியின் 3 மாநகராட்சிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.