மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சியில் இடைத்தெரு, கழுவன்திட்டை, மார்த்தாண்டம் மார்க்கெட் அருகில், வெட்டுவெந்நி, பந்நியாணி என்று மொத்தம் 5 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை நகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மேற்கூரைகள் உடைந்தும், சுவர்கள் விரிசல் விழுந்தும் காணப்படுகின்றன. கழிவறைகள் கூட அசுத்தமாக பாழடைந்த நிலையில் உள்ளன. வளாகம் முழுவதும் புதர்மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக விளங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கழுவன்திட்டை, பந்நியாணி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் படுமோசமாக பழுதடைந்து காணப்படுகின்றன.