சென்னை: 6-வது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பிரேக் இன் சர்வீஸ் சட்டத்தை பயன்படுத்தினால் சட்டப்படி எதிர்க்கொள்வோம் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். 18 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் எனவும் கூறினார். வேலை நிறுத்தத்தை தொடருவது எங்கள் நோக்கம் அல்ல, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, முதல்வர் தலையிட வேண்டும் எனவும் கூறினார். சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்தார். 90% மருத்துவர்கள் வேலைக்கு வந்தால் 12 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் ஏன்? என லட்சுமி நரசிம்மன் கேள்வி எழுப்பினார்.