சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்கள் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பணிக்கு வராத மருத்துவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வேலைக்கு வராத அரசு மருத்துவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.