சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவே தனிச்சட்டம் உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என கூறினர். தனியார் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் என்பது மத்திய அரசின் சூழ்ச்சி திட்டம் என விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் மூலம் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிட்டது என தெரிவித்தார். பெரு நிறுவனங்களிடம் விவசாய நிலங்களை ஒப்படைக்கவே குத்தகை சட்டம் வழி வகுக்கும் என கூறினார். விவசாயிகளின் கருத்தை கேட்காமல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது தவறு என தெரிவித்தார்.