சென்னை: நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 26ம் தேதி இரவு ஒரு ெதாலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், ‘நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று மட்டும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
சாலிகிராமத்தில் விஜய் தந்தை வீடு மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதன் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது.