குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத 120 மீனவர்களை மீட்கக்கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு கடும் மழை மற்றும் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தது. இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம்துரை, வல்லவலை, நீரோடி, தூத்தூர் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 120 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.