கீழ்வேளூர்: பெங்களூரு பொம்மனஹள்ளி மில்சந்திரா நகரை சேர்ந்தவர் செய்யதுஇம்திரியாஸ்பாட்சா (50). இவர், தனது மனைவி ரியானா (40), மகன் செய்யதுஅப்பாஸ் (18), மகள் சானியா(16), உறவினர் நிஜாம் (20) ஆகிய 4 பேருடன் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சுற்றுலா வந்திருந்தார். அதுபோல் பெங்களூரு கோவிந்தபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரிவான்அகமத்(34). இவர் நேற்று குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தார். நாகூர் சில்லடி கடலில் 2 குடும்பமும் குளித்தபோது அலையில் சிக்கி கொண்டனர். அதில் ரியானா, சானியா மற்றும் செய்யதுஅப்பாஸ் ஆகியோர் மீட்கப்பட்டனர்.செய்யது இன்கியாஸ், நிஜாம் ஆகியோர் இறந் தனர். மீட்கப்பட்ட பாட்சா சில நிமிடத்தில் இறந்தார்.