ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து

சென்னை: இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார்.  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி திருநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து,  மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: