சலுகை டிக்கெட்டுக்காக விமான ஊழியர் தோழியுடன் ஆள்மாறாட்டம்

கொச்சி: விமான ஊழியர்களுக்கான சலுகை டிக்கெட்டுக்காக சகோதரியின் ஆதார் கார்டில், தோழியின் புகைப்படத்தை ஒட்டி ஆள்மாறாட்டம் செய்த இண்டிகோ விமான நிறுவன ஊழியர் பிடிபட்டார்.ஒடிசாவின் புவனேஸ்வரில் இண்டிகோ விமான நிறுவன ஊழியராக பணியாற்றுபவர் ராகேஷ் வியாஸ். இவர் கடந்த 26ம் தேதி தனது 23 வயது தோழியுடன் கொச்சிக்கு விமானத்தில் வந்துள்ளார். விமான நிலையத்தில், வியாசின் தோழி மீது  சிஐஎஸ்எப் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது ஆதார் அட்டையை ஆய்வு செய்த போது, அது வியாஸ் சகோதரியின் ஆதார் என்பது தெரியவந்தது.இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சலுகை விலை டிக்கெட்டை வழங்குகிறது. இந்த டிக்கெட்டை பெற, வியாஸ் தனது சகோதரி ஆதாரில் தோழியின் புகைப்படத்தை ஒட்டி முறைகேடு செய்துள்ளார். கையும் களவுமாக பிடிபட்ட  இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories: