அக்டோபர் 30, 31 தேதிகளில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்: மருத்துவர் சங்கம் அறிவிப்பு

சென்னை:  அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31 தேதிகளில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்த போது, நாளை கையெழுத்திடாமல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். உயிர்காக்கும் அவசர சிகிச்சை, டெங்கு சிகிச்சை பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு பற்றி முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: