காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல கடந்த வெள்ளிக்கிழமை மாலை, வங்கியை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இன்று அதிகாலை 5.30 மணிக்கு பணிக்கு வந்த காவலாளி, வங்கியில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.