சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக காற்று மாசின் அளவு 198 பி.எம். ஆக உள்ளது. தீபாவளியை ஒட்டி 2 நாட்களாக பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னை நகரம் முழுவதும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையில் எங்கும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு சற்று குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.