திருச்சி : இன்றைக்குள் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நிறைவடையும் என நம்புகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துறை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் 43 மணி நேரத்தை கடந்து மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். மீட்பு பணியில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடினமான பாறைகள் என்பதால் துளையிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகம் கொண்ட மற்றொரு இயந்திரம் வந்துக்கொண்டிருக்கிறது. அதிர்வு ஏற்படும் என்பதால் வேகமாக செயல்பட இயலவில்லை.