திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சப்-ஜூனியர் மாநில அணிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் செங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் பாஸ்கரன், செயலாளர் முருககனி, பொருளாளர் ராஜா ஆகியோர்
முன்னிலையில் போட்டிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் வசந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.