தீபாவளி திருநாளில் இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாக அமையட்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தீபாவளி நாளை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருக வேண்டும் என்று முதல்வர் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தீபாவளி திருநாளில் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நன்னாளாக அமையட்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழ்ந்து இன்பம் நிறைந்து, நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து

தமிழக மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், நிம்மதியையும் தரும் நன்னாளாக தீபாவளி அமையட்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தங்களின் துன்பங்கள் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ தீபாவளியில் வழிபிறக்கும் என்று விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: