மாமல்லபுரத்தில் இந்தியா-சீனா உச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்தமைக்காக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு

சென்னை: மாமல்லபுரத்தில் இந்தியா-சீனா உச்சி மாநாட்டிற்கான ஏற்பாட்டை செய்தமைக்காக தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்புகள் மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்சிமாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடு செய்தமைக்கு தமிழக மக்களுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் பாராட்டுகள் என்று மோடி கூறியுள்ளார். 

Related Stories: